சனி, 30 ஜூன், 2018

ஆயர்பாடி மாளிகையில்







 ஆயர்குலம் கொண்டாடும் அன்புநிறைக் கண்ணனைஏய  உளமேற்றிப் பாடுவோம்  - தூயனாம்மூவடியால் பூவளந்த முனிவன்  ! - அவனருட் சேவடியைத் தொழுதல் சிறப்பு ! ஆழிரேகை உயர்த்திட்ட பாதம்..அகலிகையை உயிர்த்திட்ட பாதம்..ஆலிலையும் அணைத்திட்ட பாதம்..ஆயர்குலம் பிணைத்திட்ட பாதம்..காளிங்க நர்த்தன பாதம்..காத்தருளும் வித்தக பாதம்..மாலெனும் உயர்ந்தவன் பாதம்..மாதுடை கவர்ந்தவன் பாதம்..தரையினிற் நடந்திட்ட பாதம்..தமையுடன் கடந்திட்ட பாதம்..மறையொலி உரைத்திட்டோன் பாதம்.மனமொழி நிறைத்திட்டோன் பாதம்..மறைமுனி அழைத்திட்ட பாதம்..மகிழ்குரு மலைத்திட்ட பாதம்..உரை சொல்லும் உன்னத பாதம்..உயர்ந்திட்ட மன்னவ பாதம்.பாதம் பணிவோம்...ஸ்ரீ  கிருஷ்ணார்ப்பணம் ..









ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்
மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ

ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்
மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ
அவன் வாய் நிறைய மண்ணை உண்டு மண்டலத்தை காட்டிய பின்
ஓய்வெடுத்து தூங்குகின்றான் ஆராரோ 
ஓய்வெடுத்து தூங்குகின்றான் ஆராரோ

ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்
மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ

பின்னலிட்ட கோபியரின் கன்னத்திலே கன்னமிட்டு
மன்னவன் போல் லீலை செய்தான் தாலேலோ
பின்னலிட்ட கோபியரின் கன்னத்திலே கன்னமிட்டு
மன்னவன் போல் லீலை செய்தான் தாலேலோ
அந்த மந்திரத்தில் அவர் உறங்க  மயக்கத்திலே இவன் உறங்க
மண்டலமே உறங்குதம்மா ஆராரோ
மண்டலமே உறங்குதம்மா ஆராரோ

ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்
மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ

நாகபடம் மீதில் அவன் நர்த்தனங்கள் ஆடியதில்
தாகமெல்லாம் தீர்துகொண்டான் தாலேலோ
நாகபடம் மீதில் அவன் நர்த்தனங்கள் ஆடியதில்
தாகமெல்லாம் தீர்துகொண்டான் தாலேலோ
அவன் மோகநிலை கூட ஒரு யோகநிலை போலிருக்கும்
யாரவனை தூங்கவிட்டார் ஆராரோ
யாரவனை தூங்கவிட்டார் ஆராரோ

ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்
மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ

கண்ணனவன் தூங்கிவிட்டால் காசினியே தூங்கிவிடும்
அன்னையரே துயிலெழுப்ப வாரீரோ
கண்ணனவன் தூங்கிவிட்டால் காசினியே தூங்கிவிடும்
அன்னையரே துயிலெழுப்ப வாரீரோ
அவன் பொன்னழகை காண்பதர்க்கும் போதை முத்தம் பெறுவதற்கும்
கன்னியரே கோபியரே வாரீரோ
கன்னியரே கோபியரே வாரீரோ

ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்
மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ
மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக